துருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 864 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
துருக்கியில் உள்ள மத்திய தரை கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தீயில் பலர் சிக்கிய நிலையில், 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த துருக்கி நாட்டின் விவசாய மற்றும் வனத்துறை மந்திரி பெகிர் பக்டிமிர்லி அவர்கள் கூறுகையில், மானவ்காட் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி ஏழு பேர், மர்மரிஸ் பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் மானவ்காட் பகுதியில் 507 பேர், மெர்சின் பகுதியில் 154 பேர் மர்மரிஸ் மற்றும் போட்ரம் பகுதியில் 203 பேர் என மொத்தம் 864 பேர் இந்த காட்டுத் தீயில் காயம் அடைந்து உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். மர்மரிஸ் பகுதியை சேர்ந்த 154 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், மானவ்காட், மெர்சின், போட்ரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சிலர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…