“மெஸஞ்சர்” செயலியின் புதிய அப்டேடால் அதன் லோகோ பார்ப்பதற்கு “இன்ஸ்டாகிராம்” செயலிபோல இருப்பதால், பயனர்கள் குழப்பமடைந்தனர்.
உலகளவில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் உபயோகித்து வரும் செயலி, பேஸ்புக். இந்நிறுவனம், தங்களின் பயனாளர்கள் சாட் செய்யும் வசதியை எளிமைப்படுத்தும் விதமாக, “மெஸஞ்சர்” எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. அண்ட்ராய்டு மற்றும் iOS அடிப்படையிலான அனைத்து ஸ்மார்ட்போன்களில் “மெஸஞ்சர்” மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலி ஆகும்.
மேலும், தங்களின் பயனர்களுக்கு சிறந்த அனுபவர்களை கொடுக்கும் விதமாக, பல புதிய வசதிகளை அப்டேட் மூலம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், தற்பொழுது நீலநிறத்தில் இருக்கும் லோகோ, பர்பிள் நிறமாக மாறியுள்ளது, பயனர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் தற்போது இந்த செயலியில் லோகோ மாற்றம், ஏ.ஆர்.ஸ்டிக்கர்ஸ், குறிப்பிட்ட மெசேஜ்களை மறைக்கும் வசதி vanish mode (இது இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ளது) போன்ற சில வசதிகளை இந்த அப்டேட் மூலம் வழங்கியது.
கடந்த மாதம் பேஸ்புக் – இன்ஸ்டாகிராம் செயலிகள் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்பொழுது இந்த அப்டேட் மூலம் பேஸ்புக் மெஸஞ்சர் மூலமாக இன்ஸ்டாகிராம் நண்பர்களுடனும், இன்ஸ்டாகிராம் மூலம் ஃபேஸ்புக் மெஸஞ்சர் நண்பர்களுடனும் பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…
ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…