“ஏன் இப்படி செய்தீர்கள் சித்து அக்கா “- பாடகி சிவாங்கியின் உருக்கமான பதிவு.!

Published by
Ragi

ஏன் இவ்வாறு செய்தீர்கள் சித்து அக்கா என்று உருக்கமான பதிவை பகிர்ந்து தனது இரங்கலை பாடகி சிவாங்கி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது .

மேலும் பல ஷோக்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களை ஜாலியாக சிரிக்க வைப்பவர்.இவர் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் .இந்த நிலையில் இன்று அதிகாலை நடிகை சித்ரா தூக்கில் தொங்கியப்படி பிணமாக மீட்கப்பட்டார் .தனது சீரியலுக்கான படப்பிடிப்பை முடித்து விட்டு நள்ளிரவு தான் தங்கியிருந்த ஓட்டலில் கணவரான ஹேமந்துடன் வந்ததாகவும்,அங்கு அவர் குளிப்பதாக கூறி விட்டு ஹேமந்த் அவர்களை அறையிலிருந்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.

வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவி உபயோகித்து கதவை திறந்து பார்த்த போது பட்டு புடவையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக சித்ரா காணப்பட்டார் . இதனிடையே சித்ராவின் கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து கொலையா, தற்கொலையா என்ற சந்தேகம் போலீசாரிடையே எழுந்துள்ளது.எனவே பல கோணங்களில் விசாரணை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சித்ராவின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகை, நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் சித்ராவுடன் பல ஷோக்களில் இணைந்து பணியாற்றிய பாடகியும் ,குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் சிவாங்கி கண்ணீருடன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் தான் சித்ராவுடன் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து அக்கா நாம் நேற்று தான் ஆடியும்,பாடியும் மகிழ்ச்சியாக இருந்தோம் .24 மணி நேரம் கூட ஆகவில்லை.அதற்கு முன் எங்களை விட்டு போய் வீட்டீர்கள் .ஏன் இவ்வாறு செய்தீர்கள் . உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சித்து அக்கா என்று குறிப்பிட்டுள்ளார்.

Sivanki

Published by
Ragi

Recent Posts

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

16 minutes ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

52 minutes ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

1 hour ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

2 hours ago

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

3 hours ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

3 hours ago