“ஏன் இப்படி செய்தீர்கள் சித்து அக்கா “- பாடகி சிவாங்கியின் உருக்கமான பதிவு.!

Default Image

ஏன் இவ்வாறு செய்தீர்கள் சித்து அக்கா என்று உருக்கமான பதிவை பகிர்ந்து தனது இரங்கலை பாடகி சிவாங்கி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது .

மேலும் பல ஷோக்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களை ஜாலியாக சிரிக்க வைப்பவர்.இவர் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் .இந்த நிலையில் இன்று அதிகாலை நடிகை சித்ரா தூக்கில் தொங்கியப்படி பிணமாக மீட்கப்பட்டார் .தனது சீரியலுக்கான படப்பிடிப்பை முடித்து விட்டு நள்ளிரவு தான் தங்கியிருந்த ஓட்டலில் கணவரான ஹேமந்துடன் வந்ததாகவும்,அங்கு அவர் குளிப்பதாக கூறி விட்டு ஹேமந்த் அவர்களை அறையிலிருந்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.

வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவி உபயோகித்து கதவை திறந்து பார்த்த போது பட்டு புடவையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக சித்ரா காணப்பட்டார் . இதனிடையே சித்ராவின் கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து கொலையா, தற்கொலையா என்ற சந்தேகம் போலீசாரிடையே எழுந்துள்ளது.எனவே பல கோணங்களில் விசாரணை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சித்ராவின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகை, நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் சித்ராவுடன் பல ஷோக்களில் இணைந்து பணியாற்றிய பாடகியும் ,குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் சிவாங்கி கண்ணீருடன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் தான் சித்ராவுடன் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து அக்கா நாம் நேற்று தான் ஆடியும்,பாடியும் மகிழ்ச்சியாக இருந்தோம் .24 மணி நேரம் கூட ஆகவில்லை.அதற்கு முன் எங்களை விட்டு போய் வீட்டீர்கள் .ஏன் இவ்வாறு செய்தீர்கள் . உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சித்து அக்கா என்று குறிப்பிட்டுள்ளார்.

Sivanki

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்