“கொரோனா இன்னும் ஓயவில்லை”.. பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கும் நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை!

Published by
Surya

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா பரவலுக்கு மத்தியில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிப்பது, பேரழிவுக்கான செய்முறையாகும் என எச்சரித்துள்ளார்.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக, பல நாடுகள் ஊரடங்கில் தளர்வுகள் அளித்துக்கொண்டே வருகின்றனர். இந்தநிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா பரவலுக்கு மத்தியில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிப்பது, பேரழிவுக்கான செய்முறையாகும் என எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ஒரு மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றினார். அதில் அவர், உலகளவில் கொரோனா பரவல் இன்னும் ஓயவில்லை எனவும், கொரோனா பரவலுக்கு மத்தியில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிப்பது, பேரழிவுக்கான செய்முறையாகும் என எச்சரித்துள்ளார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தாத நாடுகள், பொதுமுடக்கத்தை தொடரவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் அவர், உலக நாடுகள் பொதுமுடக்கத்தை ரத்து செய்வதில் தீவிரமாக இருந்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் மக்கள் உயிரை காப்பது குறித்து தீவிரமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தியா உட்பட பல நாடுகள், பொதுமுடக்க கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டே வருகிறது.

அந்தவகையில் இந்தியா, கடந்த சனிக்கிழமை நான்காம் கட்ட தளர்வுகளுடனான பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. அதில், கூடுதலாக சில தளர்வுகளை அமல்படுத்தியது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரே நாளில் 78,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், நேற்று மட்டும் 78,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago