கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் நவரசா வெப் தொடரில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரயாகா மார்ட்டின் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா எனும் வெப்தொடரில் நடித்து வருகிறார் . நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்காக மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் தயாரித்துள்ள இந்த ஆந்தாலாஜி வெப் தொடரின் ஒரு பிரிவினை கௌதம் மேனன் இயக்குகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் பிரிவில் சூர்யா நடித்துள்ளார். படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
பாடகராக நடித்துள்ள சூர்யாவின் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதனையடுத்து படப்பிடிப்பு தளத்தில் உள்ள புகைப்படங்களை வெப்தொடரில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.சி. ஸ்ரீராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததும் ,அது வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் நவரசா வெப் தொடரில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையான பிரயாகா மார்ட்டின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரபல மலையாள நடிகையான இவர் தமிழில் மிஷ்கின் இயக்கிய”பிசாசு”படத்தின் மூலம் அறிமுகமானவர்.தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள “களத்தில் சந்திப்போம்” படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.சூர்யாவுக்கு ஜோடியாக பிரயாகா நடிக்கிறாரா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.இந்த வெப்தொடர் அடுத்தாண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …