பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை நடிகர் நகுல் தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான ஷோ பிக்பாஸ் . கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர் .அதன் பின் நான்காவது சீசன் சமீபத்தில் முடிவடைந்ததும் ,அதில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 5-வது சீசன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 5-ஆனது ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் பிஸியாக உள்ளதால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் பகுதியில் வெற்றிபெற்றுவிட்டால் கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசனை அவரால் தொகுத்து வழங்க முடியாது.
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் எழும்பியநிலையில், சிம்பு தொகுத்து வழங்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து, தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியை நடிகர் நகுல் தொகுத்து வழங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…