கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஆதரவு அளித்த இந்தியாவுக்கு நன்றி- WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம்!

Default Image

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த நிலையில், ஆதரவு அளித்த இந்தியாவுக்கு நன்றி என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதனை கட்டுப்படுத்த உலகளவில் சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரும் தடுப்பூசியினை போட்டுக்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா, மற்ற நாடுகளான பிரேசில், சவூதி அரேபியா, தென்னாபிரிக்கா, மியான்மர், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. இது உலகளவில் பேசப்பட்டு வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு அந்நாட்டிற்கும், அந்நாட்டின் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும், இணைந்து செயல்படுதல் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலமாக கொரோனா பரவலை தடுத்து, மனித உயிர்களை காப்பாற்றமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Kachchatheevu - BJP
a RASA - Sekar Babu
krishnamachari srikkanth ravichandran ashwin
MKStalin TNAssembly
Nithyananda