அமேசான் பங்குகளை உயர்த்தியதன் விளைவாக ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 64 பில்லியன் டாலர் அதிகரித்து,மொத்தம் 177 பில்லியன் டாலர் உள்ள நிலையில் தொடர்ந்து நான்காவது முறையாக உலகின் பணக்காரர் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்லா பங்குகள் 705% அதிகமானதால்,டாலர் அடிப்படையில் மிகப் பெரிய லாபம் ஈட்டிய எலோன் மஸ்க் 151 பில்லியன் டாலர் செல்வத்துடன் 2 வது இடத்தைப் பிடித்தார்.
பிரெஞ்சு சொகுசு பொருட்களின் அதிபர் மற்றும் LVMH தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் ,150 பில்லியன் டாலர் செல்வத்துடன் 3 வது இடத்தைப் பிடித்துள்ளார்.இதற்கு காரணம் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பிராண்டுகளில் LVMH-இன் பங்குகள் 86% உயர்ந்ததே ஆகும்.எனவே அவரது சொத்து மதிப்பு 76 பில்லியன் டாலரிலிருந்து 150 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மைக்ரோசாப்ட்,கனேடிய தேசிய ரயில்வே மற்றும் டிராக்டர் தயாரிக்கும் டீரெ & கம்பெனி ஆகியவற்றின் உரிமையாளரான பில் கேட்ஸ் 124 பில்லியன் டாலருடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
ஐந்தாவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 97 பில்லியன் டாலர்களுடன் உள்ளார். அவர் ஒரு வருடத்திற்கு முன்பு 42.3 பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டிருந்தார்.ஆனால் தற்போது பேஸ்புக்கின் பங்குகள் 80% உயர்ந்துள்ளன, ஏனெனில் உலகெங்கிலும் உள்ள மக்கள் தொடர்பில் இருக்க அதன் சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
96 பில்லியன் டாலர் மதிப்பைப் பெற்று உலகின் ஆறாவது பணக்காரராக வாரன் பபெட் உள்ளார்.உலகின் சிறந்த முதலீட்டாலர்களுள் இவரும் ஒருவர்.
ஏழாவது இடத்தில் ஹவாயில் உள்ள சாப்ட்வேர் நிறுவனரான லார்ரி எல்லிசன் உள்ளார்.இவரின் சொத்து மதிப்பு 93 பில்லியன் டாலர் ஆகும்.
அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானி மற்றும் கூகுள் துணை நிறுவனரான லார்ரி பேஜ் 91.5 பில்லியன் டாலருடன் 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஒன்பதாவது இடத்தில் கலிபோர்னியாவில் உள்ள கூகுளின் மற்றொரு துணை நிறுவனரான செர்கே ப்ரின் இருக்கிறார்.இவர் கூகுள் மூலம் 89 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி 84.5 பில்லியன் டாலர் மதிப்புடன் 10வது இடத்தில் உள்ளார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…