3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி – சீனாவுக்கு அங்கீகாரம் அளித்த WHO!

Published by
Rebekal
  • சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • சீன நிறுவனம் சைனோவேக் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உலகம் முழுவதையும் வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அண்மை காலங்களாக மிக குறைவான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தற்பொழுது பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அது போல சீனாவிலும் சைனோபார்ம் எனும் தடுப்பூசி ஒப்புதல் பெற்று பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

பல்வேறு நாடுகளிலும் தற்பொழுது அதிகளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் தடுப்பூசி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சில இடங்களில் மட்டுமே 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பலரும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் உள்ள சைனோவேக் எனும் நிறுவனத்தால் கண்டறியப்பட்ட கொரோனாவேக் எனும் தடுப்பூசி மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்தும் படி கண்டறியப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் யின் வெயிடாங் கூறியுள்ளார்.

மேலும், இந்த தடுப்பூசியை இரண்டு கட்டங்களாக 3 முதல் 17 வயதிற்குட்பட்ட நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களிடம் சோதனை செய்ததாகவும், இந்த சோதனையில் இது நம்பகமானது மற்றும் செயல்திறன் மிக்கது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது எனவும் அந்நிறுவன தலைவர் கூறியுள்ளார். இந்நிலையில், ஏற்கனவே சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருந்த உலக சுகாதார அமைப்பு, இந்த சைனோவேக் நிறுவனத்தின் தயாரிப்பான கொரோனாவேக் தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

3 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

3 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

3 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

5 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

5 hours ago

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…

6 hours ago