சென்னை டி நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ள தியாகராய நகரில் பெயருக்கு காரணமான சர்.பி.தியாகராய செட்டி நினைவு தினம் இன்று.
சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்துவந்த அய்யப்ப செட்டியார் மற்றும் வள்ளி அம்மாள் தம்பதியினருக்கு 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பிறந்த மூன்றாவது மகன் தான் வெள்ளுடை வேந்தர் பி தியாகராய செட்டி. இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து 1876 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர். இவரது மனைவி பெயர் சிந்தாமணி. இவருக்கு ஒரு மகன் மற்றும் 7 மகள்கள் உள்ளனர். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் நீதிக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராக திகழ்ந்தவருமாகிய தியாகராயர் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல் மிகப்பெரும் தொழில் அதிபராகவும் பெயர் பெற்றிருந்துள்ளார்.
இவர் பிராமணரல்லாத சாதியினரின் நலனுக்காக குரல் கொடுப்பதற்காக டி.எம்.நாயருடன் சேர்ந்து நீதிக்கட்சியை தொடங்கிய இவர் முதன்மறையாக 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் அமைச்சராகவும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆனால் இவர் முதல்வர் பொறுப்பு ஏற்காமல் கட்சித் தலைவராக மட்டுமே நீடித்துள்ளார். எனவே,நீதிக் கட்சியின் தலைவராக அக்கட்சியின் உள்ள சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் ஆகியோர் முதல்வராக இருந்த நிலையில் 1925ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி தியாகராயர் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் இவரது நினைவாக தான் சென்னையில் அந்நேரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பகுதிக்கு தியாகராயநகர் நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது தற்போது நாம் அழைக்கும் தி.நகர் இவரது பெயர் நினைவாகவே சூட்டப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் சர் பிட்டி தியாகராயர் அரங்கம் என்னும் பெயரிலும் அரசு விழாக்கள் நடத்தப்படும் அரங்கம் ஒன்று உள்ளது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…