இந்த வார நாமினேஷனில் சனம் , ஷிவானி,அனிதா ஆகியோர் எஞ்சியுள்ள நிலையில் மூவரில் யார் தங்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கமல் கேட்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்ட் ஆவது வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம் ஆரி, ஷிவானி,அனிதா , ஆஜீத்,ரம்யா,நிஷா மற்றும் சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் .இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது
நேற்றைய தினம் ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர் . இந்நிலையில் தற்போது வெளியான பர்ஸ்ட் புரோமோவில்,நாமினேஷனில் சனம் , ஷிவானி மற்றும் அனிதா ஆகியோர் எஞ்சியுள்ளனர் . அதனையடுத்து மற்ற போட்டியாளர்களிடம் இந்த மூவரில் யார் தங்க வேண்டுமென்பது உங்கள் பரிந்துரை என்று கமல்ஹாசன் கேட்கிறார்.அதற்கு ரியோ , அர்ச்சனா,நிஷா ,ரம்யா ஆகியோர் சனம் அவர்களின் பெயரையும் , சோம் மற்றும் பாலாஜி ஆகியோர் ஷிவானி பெயரையும் ,ஆஜீத் அவர்கள் அனிதா பெயரையும் கூறுகின்றனர்.
மேலும் ஆரி அவர்கள் அனிதா வெளி செல்வார்கள் என்று நினைக்கிறேன் என்று கூற கமல் குறுக்கிட்டு யார் தங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்க சனம் பெயரை கூறுகிறார்.மொத்தத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களும் பலரும் சனமின் பெயரை கூறியுள்ளனர் .ஆனால் விதி அவர் தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.ஏனெனில் அவர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது .
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…