மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகிய பிரமுகர்களிடம் உங்கள் விசுவாசம் எங்கே? முதல்முறையாக மக்கள் நீதி மையம் கட்சிக்கு வாக்களித்த மக்களை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என சனம் ஷெட்டி கூறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் பெரும்பான்மையான இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அதிமுக எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர்களாக இருந்தவர்களும் ஆங்காங்கு பல இடங்களில் நல்ல ஓட்டுகளை பெற்று இருந்தனர்.
அதுபோல மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகர் கமலஹாசன் அவர்களும் மிக சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தார்.இதனையடுத்து கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர், துணைத் தலைவர் மற்றும் மதுரவாயலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர் பத்மபிரியா ஆகியோரும் கட்சியை விட்டு வெளியேறிய நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் சனம் செட்டி.
அதில், உங்கள் விசுவாசம் எங்கே? கட்சியின் வேட்பாளராக பிரச்சாரம் செய்யும்போது மட்டும் எதற்காக சேர்ந்தீர்கள்? லட்சம் பேரிடம் ஏன் பேசினீர்கள். ஆனால் தற்பொழுது விலகும் போது மட்டும் தனிப்பட்ட காரணத்தால் விலகுகிறோம் என குறிப்பிட்டு விலகி இருக்கிறீர்கள் ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் கமலஹாசன் ஒரு அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை எனவும், அவரின் தொலைநோக்கு பார்வை அவருக்கு போதும் எனவும் சனம் செட்டி பாராட்டி பதிவிட்டுள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…