‘மாநாடு’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு எப்போது.?

Default Image

சிம்புவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்பு தனது ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .

மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது பிரமாண்ட அரசியல் படமாக உருவாகும் இந்த மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும்,அதற்காக சென்னை பிலிம் சிட்டியில் அரசியல் மாநாடு போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது சிம்புவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மார்ச் 15 அல்லது 20-ம் தேதிக்குள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது மாநாடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ்ஜே சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருவதால் தான் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் சிம்பு மாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு பத்து தல மற்றும் நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh
LPG Lorry Strike
thambi ramaiah manoj bharathiraja
shreyas iyer and rohit
US President Donald Trump