ஐக்கிய நாடுகள் ‘மனித உரிமை ஆணைக் குழு…!தோன்றியது எப்போது ?
ஐக்கிய நாடுகள் ‘மனித உரிமை ஆணைக் குழு’ 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, பிப்ரவரி 16-ஆம் தேதி தோன்றியது.
53 மூன்று நாடுகளை அங்கமாகக் கொண்ட இக்குழு, முதல் வேலையாக ‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
இந்த குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் வகுக்கப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.
எனவே 1950 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாளை ‘சர்வதேச மனித உரிமைகள் தினமாக’ அறிவித்து உலக நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.