பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸப், வருகின்ற 2021 ஆம் ஆண்டு முதல் சில குறிப்பிட்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஓஎஸ் 9 அல்லது அதற்கு மேல் மற்றும் Android 4.0.3 வெர்சன் அல்லது அதற்கு மேல் அப்டேட் செய்யாத பழைய ஸ்மார்ட்போன் பயனர்கள், 2021-லிருந்து வாட்ஸ் அப் செயலியை உபயோகப்படுத்த முடியாது.
நீங்கள் ஐஓஎஸ் 4 அல்லது அதற்கு குறைந்த மாடலைப் பயன்படுத்தும் பயனர் என்றால், அடுத்தாண்டு முதல்நீங்கள் வாட்ஸ் அப் சேவையை இழக்க நேரிடும். இதேபோல, சாம்சங் கேலக்ஸி எஸ் 2-ஐ பயன்படுத்தினால் அவர்களுக்கும் இது பொருந்தும்.
அதுமட்டுமின்றி, இந்த குறிப்பிடப்பட்ட அப்டேட் செய்யாத பயனர்கள் பேஸ்புக்கின் தலைமையில் இயங்கும் சில பயன்பாடுகளையும் இழக்க நேரிடும் என கூறப்படுகிறது.
இந்த குறிப்பிட்ட மொபைல்களை வைத்திருப்பவர்கள், தங்களது மொபைல் களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், வேறு மொபைல்களையோ அல்லது வாட்ஸ் அப்-க்கு பதிலாக வேறு செயலியைதான் பயன்படுத்த வேண்டும்.
ஐஓஎஸ் பயனர்கள், வாட்ஸ் அப்-ஐ தொடர்ந்து பயன்படுத்த தங்களது மொபைல்களை பின்வருமாறு அப்டேட் செய்துகொண்டால் இந்த பிரெச்சனையிலிருந்து தவிர்க்கலாம். அதன்படி, Settings – General- Software Update.
இந்த வாட்ஸப் தடைபடும் பிரச்சனை இங்கு குறிப்பிட்ட சில மொபைல்களில் ஏற்படும் எச்.டி.சி சென்சேஷன், சாம்சங், கூகிள் நெக்ஸஸ்-எஸ், சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா ஆர்க், எல்ஜி ஆப்டிமஸ் 2-எக்ஸ், சாம்சங் கேலக்ஸி எஸ் ஐ 9000, எச்.டி.சி டிசையர் எஸ் உள்ளிட்ட மொபைல்கள் அடங்கும்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…