வாட்ஸ் அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறைக்கு வரும் எனவும், அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களின் வாட்ஸ் அப் அக்கவுண்ட் டெலீட் ஆக வாய்ப்புள்ளது.
தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. சாட் செய்வது, செய்திகளை தெரிந்துக் கொள்வது உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம்.
இந்நிலையில் வாட்ஸ்அப், இந்தாண்டு ஜனவரி முதல் ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. அது, வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனுடன் உடன்பாடு இல்லையெனில், உங்களது வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் வாட்ஸ் அப் உபயோகிக்கும் அனைவருக்கும் ஒரு போட்டிபிகேஷன் மூலம் அனுப்பப்பட்டது. அந்த போட்டிபிகேஷனில் “allow” என்பதை கொடுக்க வேண்டும் என தெரிவித்தது.
இந்த விதிகளின்படி, வணிகப்பயன்பாட்டிற்காக பயனர்களின் சாட்களை நிர்வகிப்போம். தங்களின் தாய் நிறுவனங்களாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வணிக ரீதியாக பயனர்களின் தகவல்களை பயன்படுத்தும் என்றும், பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்படம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக WABetaInfo கடந்த மாதம் தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…