இம்சை செய்பவர்களுக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கலாம்.. வந்துவிட்டது “வாட்ஸ்அப்”-ன் புதிய அப்டேட்!

Default Image

வாட்ஸ்அப் நிறுவனம், தற்பொழுது “சாட்”-ஐ நிரந்தரமாக மியூட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது.

தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால், எதுவுமே இல்லை. அரட்டை. செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது, இந்த வாட்ஸ்அப் செயலி. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம்.

இந்தநிலையில், வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து அம்சங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்பொழுது பயனர்களின் “சாட்”-ஐ நிரந்தரமாக மியூட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. முதலில், குறிப்பிட்ட நேரம் வரையில் மட்டுமே மியூட் செய்யும் வசதி இருந்த நிலையில், தற்பொழுது அது நிரந்தரமாக மியூட் செய்து கொள்ளலாம். இதன்மூலம் நம்மை மெசேஜ் மூலம் இம்சை செய்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

இந்த புதிய அம்சத்தை பலரும் வரவேற்று வரும் நிலையில், “லாக்-அவுட்” செய்யும் அம்சத்தையும் கூடுதலாக வழங்கினால் நன்றாக இருக்கும் என சில பயனர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும், இது பலரின் பலஆண்டுகளாக வைக்கப்பட்டும் கோரிக்கையாகும், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளுக்கு வழங்கப்பட்ட மாதிரியே, வாட்ஸ்அப் செயலியிலும் வழங்க வேண்டும் என பலரும் சமூகவலைத்தளத்தில் கோரிக்கை விடுத்து வருவது, குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்