6 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இயங்கத் தொடங்கிய வாட்ஸ்அப்,பேஸ்புக் இன்ஸ்டாகிராம்

Published by
Castro Murugan

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. 6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனைசரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கம்.

மக்கள் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் சிரமத்திற்கு உள்ளையாகினர்.இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இணையதளங்கள் இணைய உலாவிகளில்(Browsers) திறக்கப்படவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் வாட்ஸப் வெப் ஆகியவை  5xx சர்வர் பிழை செய்தியை காட்டியது.

இது குறித்து பதிவிட்ட ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் நிறுவனம் சிரமத்திற்கு  மன்னிக்கவும் அதனை சரிசெய்ய முயற்சி எடுத்து வருகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது.

டவுன்டெடெக்டர்,என்ற  தடைகளைக் கண்காணிக்கும் நிறுவனமானது இது பற்றி கூறுகையில் , இது இதுவரை கண்டிராத மிகப்பெரிய தடை என்று கூறுகிறது ,இந்த பாதிப்பானது உலகம் முழுவதும் 10.6 மில்லியன் பிரச்சனை பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய இழப்பை இந்நிறுவனம் சந்தித்துள்ளது.இது நேற்று இரவு 9.30 மணி அளவில் நிகழ்ந்தது.கிட்டத்தட்ட  6 மணி நேரத்திற்கு பிறகு  இந்த பிரச்சனையை சரிசெய்யப்பட்டுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் இதனை சார்ந்திருக்கும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மற்றும் வணிகங்களின் மிகப்பெரிய சமூகத்திற்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.

எங்கள் பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை மீட்டெடுக்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்,இப்பொழுது இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடன் இணைந்ததற்கு நன்றி என ட்வீட் செய்துள்ளது அந்நிறுவனம்.

இன்று வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாத அனைவரும் மன்னிக்கவும்.நாங்கள் மெதுவாக மற்றும் கவனமாக வாட்ஸ்அப்பை மீண்டும் வேலை செய்யத் தொடங்குகிறோம்.

உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி. எங்களிடம் மேலும் தகவல்கள் பகிரப்படும்போது நாங்கள் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்போம் என்று ட்வீட் செய்துள்ளது.

மேலும் இது பற்றி தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் இப்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிக்கவும் – நீங்கள் அக்கறை கொண்டவர்களுடன் தொடர்பில் இருக்க எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வளவு நம்பியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் என்று பதிவிட்டுள்ளார் .

இத்தகைய மிகப்பெரிய செயலிழப்பால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட வருவாய்  கிட்டத்தட்ட  $ 6 பில்லியனுக்கும் அதிகமாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Castro Murugan

Recent Posts

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

43 minutes ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

1 hour ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

1 hour ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

2 hours ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

2 hours ago

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

4 hours ago