“உக்ரைன் கதி என்ன? ..இன்று தெரிந்து விடும்” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி !

Published by
Edison

உக்ரைனின் கதி என்ன ஆகும் என்பது இன்று தெரிந்து விடும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன் மீது நேற்று முன்தினம் முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,தாங்கள் தனித்து விடப்பட்டதாக உணர்வதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.சுமார் 40 நிமிடங்கள் இப்பேச்சுவார்த்தை நீடித்ததாக தெரிகிறது.அப்போது ரஷ்யா மீதான தடைகளை வலுப்படுத்துதல்,போதிய ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி முன்னேறி வரும்  ரஷ்ய படைகள் அதனைக் கைப்பற்றுவதற்காக இன்று தாக்குதல் நடத்தக் கூடும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னதாக கூறினார்.மேலும், உக்ரைனின் கதி என்ன ஆகும் என்பது இன்று தெரிந்து விடும். எனினும், இக்கட்டான நேரத்தில் அமெரிக்கா அளிக்கும் உதவிக்கு நன்றி” எனவும் கூறியிருந்தார்.

அதன்படி,உக்ரைன் தலைநகர் கீவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 3 வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதன்காரணமாக,உக்ரைன் – ரஷ்யா இடையே கடும் சண்டை நடைபெறும் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,உக்ரைனுக்கு உதவ  கூடுதலாக பாதுகாப்பு உதவிகள் தரப்படும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago