சிம்புவை பற்றி அவர்கள் கூறியது உண்மையில்லை- வெங்கட் பிரபு.! 

Default Image

சிம்புவின் மாநாடு படப்பிடிப்பில் அவர் எப்படி என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் நடந்து வந்தது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.

படப்பிடிப்புகள் தாமதமாக தொடங்க சிம்பு ஒத்துழைக்காமல் இருந்தது தான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது. அவை எல்லாம் உண்மையில்லை என்ற் வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டி கூறியுள்ளார். அதில் சிம்புவை தனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும் என்றும், அவர் தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், ஒரே குடும்பத்தை போல என்றும் கூறியுள்ளார். மேலும் தனது படமான சென்னை 28படத்தை மதுரையில் விற்க உதவியதாவும், நீண்ட நாட்களாக அவருடன் பணியாற்ற விரும்பியதாகவும், தற்போது மாநாடு படத்தின் மூலம் தனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அவரால் தான் படப்பிடிப்புகளில் பிரச்சினை வந்ததாக கூறியது உண்மையில்லை என்றும், சிம்பு குறித்து வெளியில் பேசுவதை கேட்கையில் ஆச்சரியமாக உள்ளதாகவும், அவர் படப்பிடிப்புகளுக்கு சரியான நேரத்தில் வருவதோடு முழு ஒத்துழைப்பையும் தருகிறார் என்று சிம்புவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva
Amit Shah - Tamilisai Soundararajan
Minister Ponmudi
DC wins - KL Rahul celebration