அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த காரியம்!பின்னர் நடந்த விபரீதம்!

Default Image
  • பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் செய்த தவறான செயல்.
  • பின்னர் அந்த பெண்ணின் உடல் முழுவதும் தீப்பற்றி 40 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.

ரோமானியாவில் உள்ள புக்கரெஸ்டில் அமைந்திருக்கும் ப்ளோரியாஸ்கா மருத்துவமனையில் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த தேதி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

பின்னர் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு அந்த பெண் மீது ஆல்கஹால் மாதிரியான கிருமிநாசினியை பயன்படுத்தியுள்ளனர்.பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் போது மின்சார கத்தியை பயன்படுத்தியுள்ளனர்.

அப்போது அந்த மின்சார கத்தி அந்த ஆல்கஹால் மாதிரியான கிருமிநாசினியின் மீது பட்டதால் அந்த பெண்ணின் உடலில் தீ பற்றியுள்ளது.பின்னர் 40 சதவீதம் தீக்காயங்களுடன் அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பின்னர் அந்த பெண் ஒரு வாரம் கழித்து இறந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதன் காரணமாக அங்குள்ள அறுவை சிகிச்சையின் போது என்ன நடந்தது என மருத்துவர்கள் செய்தியாளர்களுக்கு தெரிவிக்க மறுத்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் காரணமாக விசாரணை மேற்கொள்வதாக சுகாதார துறை அமைச்சர் விக்டர் கோஷ்டாச் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் இந்த மோசமான சம்பவத்திலிருந்து பாடம் கற்றுகொண்டாதாக கருதுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் சுகாதார துறை அமைச்சருடன் இணைந்து நடந்த விபரீதம் காரணமாக விசாரணை மேற்கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Pakistan vs Bangladesh 2025
tn govt
NZ vs BAN
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi