கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 2022-ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியம் வரும் என்று ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.எனவே கொரோனா பரவாமல் இருக்க தனிமனித இடைவெளி அவசியம் என்று உலக நாடுகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றது.இதற்காக உலகில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் வீடுகளிலே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் பொதுசுகாதார பள்ளி நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.அதில் ,கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தனி மனித இடைவெளியே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2003- ஆம் ஆண்டு சிறிய அளவில் தலைதூக்கிய சார்ஸ் வைரஸ் ,சிறிய இடைவெளிக்கு பின்னர் பெரிதாக பரவியதை குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் கொரோனாவும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு சீனாவையும் உதாரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு குளிர்காலத்திலும் கொரோனா தலை தூக்க வாய்ப்பு உள்ளதால் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது அவசியம்.மருந்து கண்டுபிடிக்கும் வரை 2022-ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியம் வரும்.இதனால் மட்டுமே மனிதர்களை காப்பாற்ற முடியும்.குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…