ரஜினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என மறைமுகமாக அவரே கூறுவதாக தெரிகிறது.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் கொரோனா பரவலால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது.
மேலும் அந்த அறிக்கையில், ரஜினி அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியதாகவும் இருந்தது. ஆகவே கடந்த சில தினங்களாக ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “அறிக்கை என்னுடையது இல்லை, ஆனால் தகவல்கள் அனைத்தும் உண்மை” என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் எனவும் கூறியுள்ளார். இந்த உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை உண்மை என கூறினார். அதில் ரஜினி அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அது தன்னுடைய அறிக்கை இல்லையென ரஜினி கூறியிருந்தால், அவரின் அரசியல் பயணம் தொடங்கும் என நாம் எதிர்பார்த்து இருக்கலாம்.
இதன்மூலம் அவர் மறைமுகமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என அவரே தெரிவித்ததாக தெரிகிறது. இதேபோல நவம்பர் மாதத்தில் கட்சி தொடங்கப் போவதாக ரஜினி தெரிவித்துள்ளதாக தகவல் வந்தது. அதற்கு ரஜினிகாந்த், அந்த அறிக்கை தன்னிடம் இருந்து வரவில்லை எனவும், தன்னை சார்ந்த நபர்களிடமிருந்து வந்ததாகவும், அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கைக்கும் அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை.
ரஜினி கட்சி தொடங்குவார் என்ற அழுத்தங்கள் இருப்பதன் காரணமாக அவர் கட்சி தொடங்கும் நோக்குடன் இருந்து வந்தார். ஆனால் தற்பொழுது வெளிவந்துள்ள அறிக்கை மூலம், தனது உடல்நிலையை காரணம்காட்டி கட்சி தொடங்கும் பணிக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…