ரஜினியின் படத்தை எடுக்க முடியாமல் போனதற்கு காரணம் என்ன.? பாண்டிராஜ் விளக்கம்.!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் “பசங்க” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் பாண்டிராஜ். இந்த படத்தை தொடர்ந்து வம்சம், மெரினா, கேடிபில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், நம்ம விட்டு பிள்ளை ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.

pandiraj

இந்த படங்களை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதனையடுத்து, ரஜினியின் பயோபிக்கை படமாக இயக்குனர் பாண்டிராஜ்  இயக்கவுள்ளதாக முன்பு கூறப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த பாண்டிராஜ்  இதுகுறித்து விளக்கமாக பேசியுள்ளார். இதில் பேசிய அவர் “முதலில் என்னிடம் ரஜினி சாருடைய பயோபிக் படத்தை பண்ண சொல்லி என்னிடம் கேட்டிருந்தார்கள்.. ஆனால் அப்போது நான் வேறொரு கமிட்மென்டி-ல் இருந்தேன். அதனால் என்னால் அந்த படத்தை பண்ண முடியவில்லை.

பசங்க படத்தை பார்த்துவிட்டு ரஜினி சார் போன் செய்து என்னை அழைத்து பாராட்டினார்.. அடுத்ததாக 2 மணி நேரம் அவர் அவருடைய வாழ்க்கையில் நடந்த கதைகளை என்னிடம் கூறினார்…அந்த தருணம் மிகப்பெரிய தருணம்…ரொம்ப சந்தோஷமாக இருந்தது…அந்த கதையும் பண்ணமுடியாமல் போனது..” என கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

9 minutes ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

1 hour ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

2 hours ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

2 hours ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

2 hours ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

3 hours ago