காதலின் சிறப்பு அம்சங்கள் :
காதல் இந்த வார்த்தையின் அடையாளம் நாம் நம்மையும் நம்மை சுற்றி உள்ள பொருட்களையும் அதை வைக்கும் இடத்தையும் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் பொருத்து மாறுகிறது .
காதல் என்றாலே அன்புதான் அதாவது நமக்கு மிகவும் பிடித்தவர்களை நேசிப்பதும் ஒரு விதத்தில் காதல் தான்.உதாரணமாக அம்மா ,அப்பாவை நேசிப்பதும் ஒருவிதத்தில் காதல் தான்.
நமக்கு பிடித்த வேலையை செய்து அந்த இடத்தில் நாம் வெளிப்படுத்துவதும் அன்புதான்.எனவே காதல் என்பது நாம் அனைவரிடத்த்திலும் காட்டும் அன்பின் வெளிப்பாடாகும்.
முதல் பார்வையில் காதல் என்பது பெரும்பாலும் டீன் ஏஜ் வயதில் ஏற்படுவது. சுருக்கமாக சொல்வதென்றால், பருவம் அடைந்த சமயத்தில், உடலும் மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன் வந்து பேசுபவர்களை காதல் என்று எடுத்துக்கொள்வது உண்டு
சமூகத்தைப் பற்றிய அக்கறை இல்லாமல், முழுக்க முழுக்க காதலையே நினைத்துக் கொண்டு சிலர் இருப்பார்கள். இவர்களுக்கு காமம் என்பது ஒரு விஷயமாகவே இருக்காது. அதுபோலவே, எதிர்கால வாழ்வு பற்றிய எவ்விதப் பொறுப்பும் இருக்காது. அதனால் இதுவும் காதலாக முடியாது.
காதலில் உண்மையான காதல் பொய்யான காதல் என இருவகை உண்டு.உண்மையான காதல் என்றால் ஒருவர் ஒரு பெண்ணை மட்டுமே தனது வாழ்க்கை துணைவியாக தேர்ந்தெடுத்து அவரை இறுதி மூச்சு இருக்கும் வரை கடைபிடிப்பதே ஆகும்.
இதில் பொய்யான காதல் என்பது சொல்லவே தேவையில்லை,அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஒருவர் ஒரு பெண்ணை மட்டுமில்லாமல் கண்ணுக்கு அழகாக தோன்றும் அனைத்து பெண்களையும் தனது வலையில் விழ வைத்து தன்னுடைய ஆசைக்கு இணங்க செய்வதே ஆகும்.
பொழுபோக்குக்காக பலர் காதலிப்பது உண்டு. கல்லோரி மற்றும் பணியாற்றும் இடங்களில் தன்னைப் பற்றி பலர் பெருமையாக பேச வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் காதலிப்பதுண்டு. இவர்களுக்குக் காமம் தான் அடிப்படையாக இருக்கும்.இவர்களுக்கு பொறுப்பு என்பதே இருக்காது.
எனவே காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று அதை நாம் எவ்வாறு பயன் படுத்துகிறோம் என்பது அனைவரின் மனநிலையை பொறுத்தே அமைகிறது.எனவே ஒவ்வொருவரும் காதல் செய்தால் காதலிக்கு உண்மையான காதலை வெளிப்படுத்துவதே வாழ்க்கைக்கு சிறந்த ஒன்றாக அமையும்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…