என்ன ஒரு ஆச்சரியம்…! பிறக்கும் போதே கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை…!

Published by
லீனா

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, இயல்பாகவே கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி இருந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளல்  வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த பெண் 36 வாரங்கள், மூன்று நாட்கள் கர்ப்பிணியாக இருந்தபோது மாடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டுள்ளார.

தடுப்பூசி எடுத்துக் கொண்ட மூன்று வாரங்களில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த பெண் குழந்தை நல்ல உடல் எடையிலும் ஆரோக்கியமாகவும் இருந்துள்ளது. மேலும் இந்த குழந்தையை மருத்துவர்கள் ஆய்வு செய்த போது, குழந்தையின் உடலில் உள்ள ரத்தத்தில், இயல்பாகவே கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி இருந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர்கள் சாட் ரூட்னிக், பால் கில்பர்ட் ஆகியோர் தங்களது அறிக்கையில் கூறியதாவது, கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு, பிறந்த குழந்தையின் உடலில் கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி முழுமையாக இருப்பது இதுதான் முதல் முறையாகும். இந்த குழந்தை பிறந்து 28 நாட்களுக்குப் பின் அப்பெண்ணுக்கு இரண்டாவது தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டது.

இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தை மற்றும் கருமுட்டை ஆகியவற்றில் மருத்துவர்கள் எதிர்பார்த்த அளவைவிட கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவாக தான் இருந்தது. ஆனால் இந்த குழந்தைக்கு மட்டுமே முழுமையாக நோய் எதிர்ப்பு சக்தி காணப்பட்டது என்றும், தடுப்பூசியை கற்பகாலத்தில் செலுத்துவதன் மூலம் பிறக்கும் குழந்தையின் உடலில் இயல்பாகவே கொரோனா வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியுமா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

Published by
லீனா

Recent Posts

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…

3 minutes ago

“தமிழகத்தில் எந்த கன்னட திரைப்படமும் வெளியாகாது” – கொந்தளித்த தி.வேல்முருகன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

27 minutes ago

கடிதத்துக்கு பதிலாக கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…

51 minutes ago

மொழி விவகாரம்: உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ? கமலுக்காக குரல் கொடுத்த சீமான்.!

சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து…

2 hours ago

“கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு” – கமல் தரப்பு வழக்கறிஞர்.!

கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து…

2 hours ago

இந்த வருஷம் ஆர்சிபிக்கு தான் கப்! ரூ.6.4 கோடி பெட் கட்டிய ராப் பாடகர் டிரேக்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல்…

5 hours ago