‘விசாரணை முடிந்து நாளை காலை வீட்டிற்கு அனுப்புவோம்’ – பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு…!

Published by
லீனா
  • 1991ம் ஆண்டு மே 21ம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பில் படுகொலை ராஜீவ் காந்தி அவர்கள் செய்யப்பட்டார்.
  • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு.

ராஜீவ் காந்தி இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் தமிழ் நாட்டிலுள்ள ஸ்ரீபெருபூதூரில், 1991ம் ஆண்டு மே 21ம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவத்தை விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவரது உண்மையான பெயர் காயத்ரி ஆகும்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், விசாரணை என்ற பெயரில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்து 31வது ஆண்டு தொடங்குகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய கோரி இன்று வரை பல தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து தான் வருகின்ற்னர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக 30 ஆண்டுகளுக்கு முன் 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி இரவு சிபிஐயின் சிறப்பு புலனாய்வு பிரிவு பேரறிவாளனின்  பெற்றோரிடம் கூறியது. விசாரணை முடிந்ததும் அடுத்த நாள் காலையில் பேரறிவாளனை அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதிகாரிகளின் கூற்றை ஏற்றுக் கொண்டு பேரறிவாளன் பெற்றோர் எந்த அச்சமுமின்றி அனுப்பி வைத்தனர். ஆனால் இன்று பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளை கடந்து 31-வது ஆண்டு தொடங்கியுள்ளது. பேரறிவாளன் தனது வாழ்நாளின் பாதி பகுதியை சிறையிலேயே கழித்து விட்டார். தற்போது, பேரறிவாளனின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவ சிகிச்சைக்காக 30 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மட்டுமல்லாமல், அரசியல் பிரபலங்கள் மற்றும் பல தரப்பினரும், இன்று வரை பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்காக கோரிக்கைகளை முன்வைத்து தான் வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…

51 minutes ago

“முதலில் களத்திற்கு வர சொல்லுங்க”..த.வெ.கவை சாடிய அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…

3 hours ago

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம்   கடந்த மார்ச்…

4 hours ago

“ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை” நாடாளுமன்றத்தில் பாராட்டு மழையில் இளையராஜா!

டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…

4 hours ago

இதுதான் ஒரிஜினல் சம்பவம்.. தெறிக்கும் அஜித் வசனங்கள்…GBU ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…

5 hours ago

10 ஆண்டுகளில் ED ரெய்டின் சாதனை இதுதான்! வெளியான புதிய அறிக்கை!

டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க  விசாரணை அமைப்பு ஆகும். இந்த…

5 hours ago