ஐஎஸ் கோரசான் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தொடருவோம் – அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

Published by
பாலா கலியமூர்த்தி

அடுத்த 24-36 மணி நேரத்தில் காபூல் விமான நிலையத்திற்கு எதிராக மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே இரு தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 15க்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் மற்றும் 100க்கு மேற்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

காபூல் விமான நிலையம் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியவர்களை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 26 அன்று காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆப்கானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது ஆளில்லா ட்ரான்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

நங்கர்ஹார் மாகாணத்தில் அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் கோரசான் தீவிரவாதி அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய, ஐஎஸ் கோரசான் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தொடருவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கள நிலைமை ஆபத்தானது என்றும் காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத அட்டாக்களின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது எனவும் கூறினார். அடுத்த 24-36 மணி நேரத்தில் காபூல் விமான நிலையத்திற்கு எதிராக மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று எங்கள் தளபதிகள் தகவல் தெரிவித்ததாக ஜோ பைடன் தனது தேசிய பாதுகாப்பு குழுவை சந்தித்த பிறகு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படைக்கு முன்னுரிமை அளிப்பதற்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நான் அவர்களுக்கு உத்தரவிட்டேன். அமெரிக்கர்களை பாதுகாப்பதற்கான அனைத்து அதிகாரங்களும், திட்டங்களும் பாதுகாப்பு படையிடம் இருப்பதை உறுதி செய்தேன் என தெரிவித்து, ஐஎஸ் கோரசான் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தொடருவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

3 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

3 hours ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

4 hours ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

5 hours ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

5 hours ago