ஐஎஸ் கோரசான் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தொடருவோம் – அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

Published by
பாலா கலியமூர்த்தி

அடுத்த 24-36 மணி நேரத்தில் காபூல் விமான நிலையத்திற்கு எதிராக மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே இரு தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 15க்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் மற்றும் 100க்கு மேற்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

காபூல் விமான நிலையம் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியவர்களை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 26 அன்று காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆப்கானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது ஆளில்லா ட்ரான்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

நங்கர்ஹார் மாகாணத்தில் அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் கோரசான் தீவிரவாதி அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய, ஐஎஸ் கோரசான் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தொடருவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கள நிலைமை ஆபத்தானது என்றும் காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத அட்டாக்களின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது எனவும் கூறினார். அடுத்த 24-36 மணி நேரத்தில் காபூல் விமான நிலையத்திற்கு எதிராக மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று எங்கள் தளபதிகள் தகவல் தெரிவித்ததாக ஜோ பைடன் தனது தேசிய பாதுகாப்பு குழுவை சந்தித்த பிறகு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படைக்கு முன்னுரிமை அளிப்பதற்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நான் அவர்களுக்கு உத்தரவிட்டேன். அமெரிக்கர்களை பாதுகாப்பதற்கான அனைத்து அதிகாரங்களும், திட்டங்களும் பாதுகாப்பு படையிடம் இருப்பதை உறுதி செய்தேன் என தெரிவித்து, ஐஎஸ் கோரசான் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தொடருவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

33 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

45 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

2 hours ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

2 hours ago