இந்தியாவுக்காக ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம்.. பாகிஸ்தான் பவுண்டேஷன் கடிதம்..!

Published by
murugan

கொரோனா வைரஸுடன் மோசமாக போராடும் இந்தியாவுக்கு உதவ பாகிஸ்தானின் “எடி அறக்கட்டளை” முன்வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக  தினமும் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால், மாநிலங்களின் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன், தடுப்பூசி  உள்ளிட்டவை  தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த எடி அறக்கட்டளை இந்தியாவிற்கு 50 ஆம்புலன்ஸ்களை வழங்க விரும்புவதாக தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கொரோனாவை சமாளிக்க இந்தியாவுக்கு 50 ஆம்புலன்ஸ்  வழங்க பாகிஸ்தானின் எடி அறக்கட்டளை முன்வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொடர்பான நிலைமையை இந்த அமைப்பு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அறக்கட்டளைத் தலைவர் பைசல் எடி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடிதத்தில் இந்தியாவில் தொற்றுநோயின் தாக்கம் குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம் என்று கூறினார். இந்த தொற்றுநோயால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எடி டிரஸ்ட் இந்த கடினமான நேரத்தில்  50 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை இந்திய மக்களுக்கு உதவ முன்வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார். எடி டிரஸ்ட் பாகிஸ்தானில் ஏழை மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை வழங்குகிறது.

பாகிஸ்தானியர்கள் ட்விட்டரில் இந்தியாவுக்காக பிரார்த்தனை:

கொரோனவை எதிர்த்து போராடும் இந்திய மக்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகின்றேம். இந்தியாவின் கொரோனா நிலைமையை பார்த்த பாகிஸ்தான் மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். பாகிஸ்தான் நடிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் இந்தியாவுடன் தோளோடு தோள் நிற்பதாக கூறி #PakistanstandswithIndia என்ற ஹேஸ்டேக் தொடர்ந்து ட்விட்டரில் ட்வீட் செய்யப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பதட்டமாக இருந்தாலும், மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் கஷ்டத்தில் நிற்கிறார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள்.

 

 

 

 

Published by
murugan

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

7 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

9 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

11 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

12 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

12 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

15 hours ago