தலிபான்களுடன் நட்புறவை வளர்க்கத் தயாராக இருக்கிறோம் – சீனா அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் நட்புறவை வளர்க்கத் தயாராக இருக்கிறோம் என்று சீனா அறிவிப்பு.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் தலைமையிலான அரசுடன் நடப்பு ரீதியிலான உறவுகளை மேம்படுத்த தயாராக இருக்கிறோம் என்று சீனா தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்கள் தலைமையிலான அரசை பாகிஸ்தான் ஏற்கனவே அங்கீகரித்த நிலையில், சீனாவும் தற்போது ஆதரவு கரம் நீட்டியுள்ளது.

இதனிடையே, ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பினர் நடவடிக்கையை பொறுத்து அவர்களின் அரசை அங்கீகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என ரஷ்யா அறிவித்திருந்தது. மேலும், தலிபான் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலையில், ஆட்சி பொறுப்பு முழுமையாக தலிபான் அமைப்பினரிடம் வந்தது. மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது தூதரகத்தை முழுமையாக காலி செய்து விட்டதாக அமெரிக்கர் அறிவித்துள்ளது.

விமான நிலையத்தில் பாதுகாப்பு படை உதவியுடன் தங்கியுள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து என அறிவித்தனர். விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழல் விமான நிலையத்தில் இன்று காலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.

மேலும், விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நிலவி வருகிறது. பிற்பகல் 12.30க்கு டெல்லியில் இருந்து புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்க முடியாத சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே 129 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அடுத்த விமானம் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago