கொரோனா வைரஸ் மோசமானது, அதன் விளைவை இனிமே தான் சந்திக்க போகிறோம் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் சுமார் 200 நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் வைரஸில் தாக்கம் குறையாமல் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுவரை உலகளவில் 25,57,806 பேர் பாதிக்கப்பட்டு, 1,77,674 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இந்த கொரோனா என்ற பெருந்தொற்று காலத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து செயலாற்றுவதே அவசியம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வயசில் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் வழங்கி வந்த நிதியையும் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸை அரசியல் ஆகாதீர்கள் என்றும் அது நோய்த்தொற்றை அதிகரிக்க செய்யும் என செய்தியாளர்களிடம் சுகாதார அமைப்பின் இயக்குநர் கூறியுள்ளார். மேலும் ஒன்றாக இணைந்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் எனக் கூறிய டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸ் மிக மோசமானது என்றும் அதன் விளைவை இனிமே தான் சந்திக்க போகிறோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…