கொரோனா வைரஸ் பரவலை தண்ணீரால் அழிக்க முடியும்! ரஷ்ய ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவல்!

Published by
லீனா

கொரோனா வைரஸ் பரவலை தண்ணீரால் அழிக்க முடியும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவில் உள்ள வெக்டார் மாநில வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில், கொரோனா வைரஸ் பரவலை தண்ணீரால் அழிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 90 மணி நேர வைரஸ் துகள்கள் அறை வெப்பநிலையில் உள்ள நீரில் 24 மணி நேரத்திலும், 99.9 சதவீதம் 72 மணி நேரத்திலும் இறக்கின்றன என்று ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் சில நிபந்தனைகளில் தண்ணீரில் வாழ முடியும் என்றாலும், கடல் அல்லது புதிய நீரில் வைரஸ் பெருக்கமடையாது என்றும், எஃகு, லினோலியம், கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் பரப்புகளில் வைரஸ் 48 மணி நேரம் வரை செயல்பட முடியும் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்று நம்மில் அதிகமானோர் கொரோனா வைரஸை அழிப்பதற்கு பயன்படுத்தக் கூடிய ஆயுதங்களில் ஒன்று கிருமிநாசினி. வீட்டு கிருமிநாசினிகள் வைரஸுக்கு எதிராக செயல்படுகின்றன என்றும், குளோரின் கொண்ட கிருமிநாசினிகள் 30 விநாடிகளுக்குள் கொரோனா வைரஸின் மேற்பரப்பை முழுமையாக அழிக்க முடியும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

11 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago