ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அங்கு படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. அதனுடன் ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட தற்போது சென்னையில் ஓய்வு எடுத்து வருகிறார்.அதன் பிறகு படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி இந்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.
இந்த நிலையில் சென்னையில் ஓய்வு எடுத்து வந்த ரஜினி நேற்று முதல் தொடங்கிய அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் நேற்று முதல் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.இருப்பினும் இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களைடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் : நேற்று (மார்ச் 25) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய முதல் ஐபிஎல்…
வாஷிங்டன் : அமெரிக்கா வாக்குப்பதிவு நடைமுறைகளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், அதனை திருத்தி இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை…
டெல்லி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அதிமுக தலைவர்கள்…
அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் முடியாது.…
சென்னை : தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல தொடங்கியுள்ளது. இதில்…