தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார்.
இந்த நிலையில், தமிழில் மட்டுமில்லாமல் அணைத்து மொழிகளிலும் விஜய்க்கு ரசிகர்களுக்கு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதனால் விஜய்யை வைத்து படம் இயக்க அணைத்து மொழி இயக்குனர்களும் தயாராகத்தான் உள்ளனர்.
அந்த வகையில், தமிழில் ‘நேரம்’ படத்தையும், மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தையும் இயக்கி அல்போன்ஸ் புத்திரன் விஜய்யை வைத்து படம் இயக்க ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அல்போன்ஸ் புத்திரன் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்துகொண்டிருந்தார் . அப்போது ரசிகர் ஒருவர் விஜய்யின் படத்தை எப்போது இயக்குவீர்கள் என்ற கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன் “பிரேமம் படம் வெளியான போது முதல் பாராட்டே விஜய் சாரிடம் இருந்துதான் வந்தது. அதன்பிறகு தனிப்பட்ட முறையில் ஒருமுறை விஜய்யை சந்தித்தேன். நிச்சயம் ஒருநாள் என்னை படம் இயக்க அழைப்பார் என்று நம்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…