US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி..!

Published by
murugan

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு செய்வது சற்று வித்தியாசமாக இருக்கும். அங்கு உள்ள முக்கிய கட்சியானஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி மட்டுமே உள்ளது. இந்த இரு கட்சிகள் சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிப்பார்கள். அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உட்க்கட்சித் தேர்தல் நடத்தப்படும். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்தான்  அதிபர்  வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதனால் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது அதிபராக உள்ள ஜோபேடன் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான  குடியரசுத் தலைவர் சார்பில் பலர்  அதிபர் வேட்பாளருக்கான விருப்பங்களை தெரிவித்தன. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியும் விருப்பம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  “எனக்கு வேறு வழியில்லை,  டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதால்  விலகுவதாகவும், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வாழ்த்துகள்” என  தெரிவித்துள்ளார். இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் விவேக் ராமசாமிக்கு ஆதரவு அதிகமாகவே இருந்தது” என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு..அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை..!

யார் இந்த விவேக் ராமசாமி ?

விவேக் ராமசாமி ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும் பயோடெக் நிறுவனத்தின் தலைவர், ராமசாமியின் பெற்றோர் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள், ராமசாமி அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் பிறந்தார்.

கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.  இந்த அறிவிப்புக்கு பிறகு விவேக் ராமசாமி குடியரசுக் கட்சி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில், விவேக் ராமசாமி தனது ஒரு பிரச்சாரத்தால்  அவருக்கான செல்வாக்கை அதிகரித்தது.  நாட்டின் அதிபராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின்  நாட்டுக்கு திருப்பி அனுப்புவேன் என்று கூறியிருந்தார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் எவருக்கும் எந்த விதமான மெத்தனமும் காட்டப்பட மாட்டாது என்றும், அந்த புலம்பெயர்ந்தோரை அவர்களின் நாட்டிற்கு அனுப்புவது மட்டுமல்லாமல், அவர்களின் குழந்தைகளின் குடியுரிமையையும் ரத்து செய்வோம், அமெரிக்காவுக்கே முன்னுரிமை தருவேன்  என கூறினார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விவேக் ராமசாமி விலகியதையடுத்து இப்போது இந்த போட்டியில் மூன்று பேர் மட்டுமே முன்னிலையில் உள்ளனர். இதில் டொனால்ட் டிரம்ப் தவிர நிக்கி ஹேலி, ரான் டி சாண்டிஸ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

 

 

 

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

58 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

1 hour ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

5 hours ago