தல அஜித்தின் அடுத்த படத்தை பில்லா பட இயக்குநரான விஷ்ணுவர்தன் இயக்க போவதாக வெளியாகிய தகவல் பொய் என்று பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர் கொண்ட பார்வை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நடத்த அனுமதி வழங்கியதை அடுத்து, அஜித் அவர்கள் பலரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் பணிகளை ஆரம்பிக்கலாம் என்று கூறியதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அடுத்த விஷயம் அஜித்தின் 61வது படத்தை குறித்த தகவல்கள் தான். சமீபத்தில் கூட தலயின் அடுத்த படத்தை கோகுலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாகவும், சுதா கே பிரசாத் இயக்க போவதாகவும் தகவல் வெளியானது. அது மட்டுமின்றி கார்த்திக் நரேன், வெங்கட் பிரபு, சிவா உள்ளிட்ட இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டது. அதனையடுத்து தல அஜித் அவர்களின் அடுத்த படத்தை பில்லா மற்றும் ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க போவதாகவும், விஷ்ணுவர்தன் ஏற்கனவே அஜித் அவர்களிடம் கதை கூறியதாகவும், அவரும் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியானது .ஆனால் அப்படி எந்த பேச்சுவார்த்தையும் அஜித் மற்றும் விஷ்ணுவர்தன் இடையில் நடக்கவில்லை என்ற உண்மையை பிரபல நடிகரான சித்ரா லட்சுமணன் போட்டுடைத்துள்ளார். இதிலிருந்து தல 61 படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…