விஷாலின் சக்ரா படம் வெளியீடு 4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்திய பின் தான் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகிய ஆக்ஷன் படத்தில் நடிகர் விஷால் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்த படத்தால் 8 கோடியே 29 லட்சத்துக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டதால் நடிகர் விஷால் இந்த படத்திற்கான நஷ்ட ஈடை தான் திருப்பி தருவதாக உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அவர் இதற்கான வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், ட்ரெண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு கதையை இயக்குனர் ஆனந்த் என்பவர் படமாக்க ஒப்பந்தம் செய்துள்ளார். விஷால் விலகி சென்ற பின் வேறு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தனது கதையை விஷாலை வைத்து சக்ரா எனும் தலைப்பில் எடுத்துள்ளதாக ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.
தனது நிறுவனத்தின் அதே கதையை இயக்குனர் ஆனந்த் நடிகர் விஷாலை வைத்து படம் எடுத்து உள்ளதால், அந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 4 கோடிக்கு உத்தரவாதத்தை செலுத்தி முடித்த பின்பே விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…