ஆக்சன் படத்தை அடுத்து விஷால் நடிக்கப்போவது துப்பறிவாளன்-2வா? இரும்புத்திரை-2வா?!

Published by
மணிகண்டன்

நடிகர் விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்சன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டு படப்பிடிப்புகள் முடிந்து சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த படத்தை அடுத்தது இரும்புத்திரை-2 திரைப்படத்தில் விஷால் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் இரும்புத்திரை-2 திரைப்படத்தின் கதைக்களத்தில் இன்னும் வேலை செய்து விட்டு வருமாறு இயக்குனரிடம் கூறி அனுப்பிவிட்டாராம். ஆதலால், மிஸ்கின் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான துப்பறிவாளன் படத்தின் அடுத்த பாகத்தில் விஷால் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வேலைகளில் இயக்குனர் மிஷ்கின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஆக்சன் படத்தை முடித்து விஷால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா? அல்லது இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா? அது இல்லாமல் அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறாரா என்பது தற்போது குழப்பமாக உள்ளது. விரைவில் இது பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?

சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…

42 minutes ago

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…

2 hours ago

சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…

சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…

2 hours ago

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…

3 hours ago

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…

3 hours ago

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…

3 hours ago