விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கணக்காளர் பணமோசடி செய்ததாக கூறியதை அடுத்து தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அந்த பெண் கணக்காளர் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் விஷால் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியில் பணிபுரியும் ரம்யா என்பவர் ரூ. 45 லட்சம் மோசடி செய்ததாக கூறி விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளரான ஹரி, கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனையடுத்து சென்னை விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மோசடி செய்த கணக்காளரான ரம்யா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனக்கும் தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார். மேலும் தான் மோசடி செய்ததாக கூறப்பட்டதை மறுத்ததோடு, மேலாளர் ஹரியின் ஆதரவாளர்கள் சிலர் தனது வீட்டில் வந்து மிரட்டியதாகவும், தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் பொது இடத்தில் வைத்து கணக்குகளை ஒப்படைக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலாளர் கூறுகையில், ரம்யா பண மோசடி செய்ததை ஒப்பு கொண்டதோடு, காவல் நிலையத்தில் வந்து சமரசம் செய்ய தயார் என்றும் தெரிவித்துள்ளதாக கூறினார். தற்போது இந்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…