விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கணக்காளர் பணமோசடி செய்ததாக கூறியதை அடுத்து தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அந்த பெண் கணக்காளர் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் விஷால் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியில் பணிபுரியும் ரம்யா என்பவர் ரூ. 45 லட்சம் மோசடி செய்ததாக கூறி விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளரான ஹரி, கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனையடுத்து சென்னை விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மோசடி செய்த கணக்காளரான ரம்யா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனக்கும் தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார். மேலும் தான் மோசடி செய்ததாக கூறப்பட்டதை மறுத்ததோடு, மேலாளர் ஹரியின் ஆதரவாளர்கள் சிலர் தனது வீட்டில் வந்து மிரட்டியதாகவும், தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் பொது இடத்தில் வைத்து கணக்குகளை ஒப்படைக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலாளர் கூறுகையில், ரம்யா பண மோசடி செய்ததை ஒப்பு கொண்டதோடு, காவல் நிலையத்தில் வந்து சமரசம் செய்ய தயார் என்றும் தெரிவித்துள்ளதாக கூறினார். தற்போது இந்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…