செப்டம்பர் 12-ம் தேதிக்கு விஷால் வழக்கு ஒத்திவைப்பு..!

Default Image

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் வேலை  செய்பவர்களிடம் இருந்து பிடித்த டிடிஎஸ் தொகையை செலுத்தாததால்  விஷால் மீது வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தொடர்பாக இரண்டு முறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகவில்லை  இதனால் அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு விட்டது.

இந்நிலையில் இன்று  சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் ஆஜரானார்.ஒருமணி நேரத்திற்கும் மேல் நீதிமன்ற வளாகத்தில் விஷால் இருந்தார்.பின்னர் அவர் வழக்கை செப்டம்பர் 12-ம் தேதிக்கு நீதிபதி மலர்மதி  ஒத்திவைத்து உத்தரவு விட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்