விராட் கோலியின் உயிருக்கு ஆபத்து? பயிற்சியை ரத்து செய்த ஆர்சிபி !!

Published by
அகில் R

சென்னை : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டிக்கான பயிற்சியில் பெங்களூரு அணி ஈடுபட்டு வந்த நிலையில், விராட் கோலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதி தற்போது அந்த பயிற்ச்சியை ரத்து செய்துள்ளனர்.

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின், எலிமினேட்டர் போட்டியில் இன்று ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான பயிற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது, இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் அணி தங்களது வலைப்பயிற்சியை ரத்து செய்துள்ளனர்.

மேலும், விராட் கோலியின் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆர்சிபி அணி தங்களது வலை பயிற்சியையும் ரத்து செய்துள்ளனர். குஜராத் கல்லூரி மைதானத்தில் ஆர்சிபி அணி தங்களது பயிற்சியை இன்று மேற்கொள்ள திட்டமிட்டிருந்தன. ஆனால், பெங்களூரு அணி பயிற்சிக்காக அங்கு செல்லவில்லை.

மேலும், இந்த பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பையும் பெங்களூரு அணி நடத்தவில்லை. இதனை தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளும் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் தான் ஆர்சிபி அணி தங்கள்து பயிற்சியை ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக 4 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த திங்கள்கிழமை அன்று கைது செய்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக குஜராத் காவல்துறை அதிகாரி விஜய்சிங்கா ஜூவாலா கூறுகையில், “விராட் கோலி இந்த கைது குறித்து அகமதாபாத் வரும்போதே கேள்விப்பட்டிருக்கலாம். அவர் இந்த நாட்டின் சொத்து. அவரது பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதே நேரம் ஆர்சிபி அணி எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்க தயாராகவில்லை. மேலும், அவர்கள் வலைப்பயிற்சியை ரத்து செய்துள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருக்கும் இது குறித்து முறையான தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது”, என்று அந்த காவல் துறை அதிகாரி கூறியிருக்கிறார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்சிபி தங்கியுள்ள ஹோட்டலுக்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல ராஜஸ்தான் அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

7 hours ago
‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

8 hours ago
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

9 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

10 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

10 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

12 hours ago