21 வாரங்களில் திருமண தடை சுக்குநூறாகி விடும்! சக்திவாய்ந்த விராலி மஞ்சள் பூஜை பற்றிய தகவல்கள்!

Published by
மணிகண்டன்
  • சரியான வயதில் நல்ல துணையுடன் திருமணம் நடக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுகின்றனர்.
  • ஆனால், அதற்கான சூழ்நிலைகள் தற்காலத்தில் அமைவது மிகவும் கடினமாக இருக்கிறது.

பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகள் நன்றாக வளர வேண்டும், நன்றாக படிக்க வேண்டும், அதன் பின் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்று ஆயிரம் கவலை இருக்கிறது. அதனில் மேலாய், திருமண வயதை தாண்டிய பின்பும் திருமணம் ஆகவில்லை என்றால் பெற்றோர் கவலை அதிகமாகி விடுகிறது.

அதிலும், தங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தில் எந்த வித குறைகளும் இல்லாமல் திருமண வயதை தாண்டி திருமணம் ஆகாமல் இருந்தால் பெற்றோர்கள் மிகவும் கவலையுடன் இருக்கின்றனர். அந்த கவலைகளை விராலி மஞ்சள் பூஜை கொண்டு நிவர்த்தி செய்யலாம்.

நமக்கு நன்கு தெரிந்த விரலிமஞ்சள் இதனை 27 என்ற கணக்கில் வாங்கி கொள்ளலாம். அந்த விராலி மஞ்சளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து அதனில் ஒரு மஞ்சளில் மஞ்சள் கயிற்றை கட்டி அம்பாளுக்கு சாத்தி விட வேண்டும்.

பின்னர், மீதமுள்ள 26 மஞ்சளை 26 சுமங்கலி பெண்களுக்கு வழங்க வேண்டும். அதனுடன் ரவிக்கை துணியும் வழங்க வேண்டும். அந்த சுமங்கலி பெண்களிடம் திருமணமாகாத ஆணோ / பெண்ணோ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை 21 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்கையில் 21 வாரங்கள் முடிவதற்குள் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு திருமணம் யோகம் கூடி வந்துவிடும். திருமண யோகம் கூடி வந்தாலும் இந்த பூஜையை தொடரவேண்டும். 21 வாரங்கள் முடிந்த பிறகு இந்த பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

21வது வாரம் முடிக்கையில் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூல தட்டில் பழங்கள், பிரசாதம் உள்ளிட்டவற்றை வைத்து கொடுக்க வேண்டும். உங்களால் முடிந்தால் ஒரு ஏழை பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்யலாம். அந்த புண்ணியம் உங்கள் பரம்பரைக்கே தொடரும் என்பது சாஸ்திரம். மற்றவர்களுக்கு செய்யும் நன்மை நம்மை பின்தொடரும்.

Recent Posts

அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”

அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…

53 minutes ago

“CSK இப்படி தடுமாறியதை நான் பார்த்ததே இல்லை! ” சுரேஷ் ரெய்னா வேதனை!

சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…

1 hour ago

KKR vs GT : வெற்றி பாதைக்கு திரும்புமா கொல்கத்தா? குஜராத்திற்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…

1 hour ago

போப் மறைவு: பிரதமர் மோடி முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…

4 hours ago

உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!

டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…

4 hours ago

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை! நாகர்கோயில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…

5 hours ago