6,300 அடி பள்ளத்தாக்கின் உச்சியில் இருந்து 2 பெண்கள் கீழே விழுந்தனர்.
ரஷ்ய குடியரசான தாகெஸ்தானில் உள்ள சுலக் பள்ளத்தாக்கு 6,300 அடி உயரம் கொண்டது. இந்த பள்ளத்தாக்கின் விளிம்பில் ஊஞ்சல் ஓன்று உள்ளது. இந்த பள்ளத்தாக்கிற்கு வரும் பலர் அதில் விளையாடுவது வழக்கம். சமீபத்தில், சுலக் பள்ளத்தாக்கின் விளிம்பில் ஊஞ்சல் ஆடும்போது 2 பெண்கள் கீழே விழுந்தனர்.
இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் வெளியான வீடியோவில் 6,300 அடி குன்றின் மேல் இரண்டு பெண்கள் ஊஞ்சல் சவாரிக்கு அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அவர்கள் உட்கார்ந்த பிறகு, பின்னால் இருந்து ஒருவர் ஊஞ்சலில் தள்ளப்படுவதை பார்க்கலாம். இந்த ஊஞ்சல் சவாரியை மகிழ்ச்சியுடன் 2 பெண்களும் பயணம் செய்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஊஞ்சலின் செயின் அறுந்தது. இதனால் அவர்கள் பள்ளத்தாக்கில் நிலை தடுமாறி விழுந்தனர். பின்னால் இருந்து ஊஞ்சலை தள்ளிய நபர் ஊஞ்சலை வேகமாக தள்ளாததால் ரொம்ப தூரம் ஊஞ்சல் செல்லவில்லை. பள்ளத்தில் கீழே விழுந்த அந்த 2 பெண்களும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…