படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய மாரி செல்வராஜ்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Default Image

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாமன்னன் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் உதயநிதி, பஹத் பாசில், வடிவேலு,கீர்த்தி சுரேஷ் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையாகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

HBDMariSelvaraj 2

இந்நிலையில் இன்று இயக்குனர் மாரி செல்வராஜிற்கு 38 வது பிறந்த நாள் அவருக்கு ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இதனையெடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாமன்னன் படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்