#BREAKING: இலங்கையில் வன்முறை.. வெளிநாடு தப்பியோட ராஜபக்சே குடும்பம் திட்டம்!

Default Image

ராஜபக்சே குடும்பத்தினர் நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்று பொதுமக்கள் முழக்கம்.

இலங்கையில் பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ளதால் அங்கு மக்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறைக்கு மத்தியில் வெளிநாடு தப்பியோட ராஜபக்சே குடும்பம் திட்டமிட்டு இருப்பதால், பொதுமக்கள் கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேற கூடாது என மக்கள் முழக்கமிட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று தனது பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த பின்னர், அவரது மாளிகையில் தங்கியிருந்தபோது, அரசுக்கு எதிரானவர்கள் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டனர். உள்ளே நுழைய முயற்சி செய்தும் ஆர்பாட்டக்காரர்களால் நுழைய முடியவில்லை. அங்கிருந்து இன்று அதிகாலை ராஜபக்சே வெளியேறி, தற்போது திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் பாதுகாப்புக்கு மத்தியில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இலங்கையில் வன்முறை வெடித்துள்ள நிலையில், திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்பியோட முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அப்பகுதியில் ஆர்பாட்டடக்கரார்கள் குவிந்து வருகின்றனர். ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட கூடாது என்றும் அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
RIP Syed Adil Hussain Shah - PAHALGAM Attack
pahalgam ipl bcci
Union minister Amit shah visit Anantnag dt hospital
JK Pahalgam Terror Attack
CSK - CEO
PM Modi Soudi to Delhi visit