டிரம்ப், ஜோ பைடன் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.!

Default Image

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று, அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப், தேர்தலில் விதிமீறல்கள் நடந்ததாகவும், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாக கூறினார்.

தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். மறுபுறம் டிரம்ப் ஆதரவாளர்கள் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்றுஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில்  டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்.

அதில் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவித்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி பேரணி நடத்தினர். அதே நேரத்தில் டிரம்ப்பிற்கு எதிரானவர்கள் பேரணி நடத்தினர்.

ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அங்கு வன்முறை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh