மட்டன் எல்லாம் இல்ல! கறார் காட்டிய மேனஜருக்கு கன்னத்தில் போட்ட விஜயகாந்த்!

Published by
பால முருகன்

சினிமாவில் சாப்பாடு போடு அதனை ரசித்து மக்களின் பசியை போக்கிய மனிதர் என்றால் நடிகர் விஜயகாந்த் என்று கூறலாம். அந்த அளவிற்கு இவருடைய படங்களை பார்த்து இவருக்கு ரசிகர்கள் அதிகமானதை விட இவருடைய குணத்தை பார்த்து ரசிகர்கள் அதிகமானது ஏராளம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு கேட்காமல் உதவி செய்வது பசி என்று வருபவர்களுக்கு சாப்பாடு போடுவது என பல உதவிகளை செய்து இருக்கிறார்.

இப்படி பட்ட நல்ல குணம் கொண்ட விஜயகாந்த் அதிகமாக கோபபடும் விஷயமும் சாப்பாட்டுக்காக தானாம். குறிப்பாக சாப்பிட வருபவர்களை சரியாக கவனிக்கவில்லை என்றால் விஜயகாந்திற்கு கெட்ட கோபம் வந்துவிடுமாம். அப்படி ஒரு முறை மட்டன் இல்லை என்று மேனஜர் ஒருவர் சாப்பிட வந்தவர்களிடம் சற்று கறார் காட்டி பேசினாராம்.

இதனை பார்த்துக்கொண்டிருந்த விஜயகாந்த் வேகமாக சென்று அந்த மேனஜர் கன்னத்தில் அறைந்துவிட்டாராம். இந்த தகவலை அவருடன் இருந்த நடிகரும் சினிமா விமர்சகருமான மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கேப்டன் விஜயகாந்த் படப்பிடிப்பின் போது இடைவேளை நேரம் வந்ததும் பிரேக் எடுக்கமாட்டார்.

விஜயகாந்துடன் நடிக்க மறுத்த டாப் நடிகைகள்? லிஸ்ட்டை வெளியிட்ட மூத்த நடிகை!

கீழே சென்று சாப்பாடு எப்படி போகிறது நல்ல சாப்பிடுகிறீர்களா இல்லையா? சாப்பாட்டில் யாருக்காவது குறை இருக்கிறதா? எல்லாருக்கும் சரியாக சிக்கன் மட்டன் இருக்கிறதா? என்று கேட்டுவிட்டு பார்ப்பார். அப்படி பார்த்துவிட்டு எல்லாரும் சாப்பிட்டுவிட்டு முடித்த பிறகு தான் விஜயகாந்த் கடைசியில் தான் சாப்பிடுவார்.

அப்படி ஒரு முறை சாப்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒரு 13 பேருக்கு சரியான சாப்பாடு இல்லை சரியான சிக்கன் மட்டன் எதுவும் இல்லை. அப்போது மட்டன்  இருக்கிறதா? என்று அந்த 13 பேரில் சிலர் கேட்க அதற்கு மேனஜர் மட்டன் எல்லாம் இல்லை  என்று சற்று கறார் காட்டி பேசிவிட்டார். இதனை அங்கு இருந்து விஜயகாந்த் பார்த்துவிட்டார்.

பார்த்துவிட்டு வேகமாக அங்கு இருந்து வந்தார். கேப்டன் எப்போதுமே கோபபட்டுவிட்டால் பேசலாம் மாட்டார் அடித்துவிடுவார். அதைப்போல அந்த கறார் காட்டிய மேனஜருக்கு விஜயகாந்த் கன்னத்தில் ஒரு அடியை போட்டுவிட்டார். போட்டுவிட்டு என்ன நீ இப்படி பேசுகிறாய்? அவர்கள் சாப்பிட வந்து இருக்கிறார்கள் சரியாக சாப்பாடு போடவேண்டாமா? எல்லாருக்கும் நான் வாங்கிவிட்டு வர சொன்னேன்.

பிறகு எதற்காக அவர்களுக்கு மட்டும் சிக்கன் மட்டன் எதுவும் இல்லாமல் வெறும் குழம்பை மட்டும் கொடுத்தால் எப்படி நன்றாக இருக்கும் என்று கேட்டுவிட்டு கையில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்து உடனடியாக போய் அவர்களுக்கு மட்டனை வாங்கி கொண்டு வர சொன்னார். அது தான் கேப்டன்” என புகழ்ந்து பேசியுள்ளார் மீசை ராஜேந்திரன். இப்படி மக்களின் பசியை போக்கிய விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

15 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

15 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

15 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

16 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

16 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

16 hours ago