பரிதாப செய்தியை காட்டிய இயக்குனர்? உடனடியாக உதவிய விஜயகாந்த்!

Published by
பால முருகன்

நடிகர் விஜயகாந்த் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் இருந்தே வயிறு நிறைய அனைவர்க்கும் சாப்பாடு போடுவது. கஷ்டப்படும் மக்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்வது என பலருக்கும் தெரியாமலே உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறார். அவர் உதவி செய்த யாருக்கும் தெரியாத சில தகவல்களையும் அவருடன் படங்களில் பணியாற்றிய பிரபலங்கள் பேட்டிகளில் வெளிப்படையாக கூறுவது உண்டு.

அந்த வகையில் ஒரு வருக்கு உதவி தேவை என்று செய்தியை பார்த்தே தெரிந்து கொண்ட விஜயகாந்த் உடனடியாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார். இந்த தகவலை பிரபல இயக்குனரான தங்கர் பச்சான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கள்ளழகர் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் என்கூட அமர்ந்து கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தார்.

அந்த சமயம் நான் ஒரு பத்திரிகையின் செய்தியை படித்துக்கொண்டு இருந்தேன். அந்த பத்திரிகையில், அதில் ஒருவருக்கு உதவி செய்யவேண்டும் அவருக்கு ரொம்பவே பணம் தேவை படுவதாக போட்டிருந்தது. இதனை நான் படித்துக்கொண்டிருந்த போது விஜயகாந்த் அதனை பார்த்துவிட்டு என்னையா அது? என்று கேட்டார்.

விஜயகாந்த் உடல்நிலை…விஜய்க்கு முன் முந்திய சூர்யா.! கோடானகோடி வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்..

அதற்க்கு நான் அதில் போட்டிருந்த விவரங்களை காமித்தேன். அவர் அந்த செய்தியை என்னிடம் இருந்து வாங்கி கொண்டு படித்தார். படித்து முடித்து அடுத்த நாள் அவர்களுக்கு தேவையான 4 லட்ச ரூபாயையும் மொத்தமாக விஜயகாந்த் கொடுத்து உதவி செய்தார்.  அந்த சமயம் அதாவது 1998-ஆம் ஆண்டு எல்லாம் லட்ச கணக்கு ரூபாய் என்பது பெரிய விஷயம். ஆனால், கொஞ்சம் கூட யோசித்து பார்க்காமல் உதவி என்றவுடன் அவர்களுக்காக பணம் கொடுத்து விஜயகாந்த் உதவி செய்தார்” என  தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.

இந்த உதவி மட்டும் இல்லை இதைப்போலவே விஜயகாந்த் பல உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறார். இப்படி உதவி செய்த மனிதரின் தற்போதைய நிலை அனைவரையும் கண்கலங்க வைக்கும் விதமாக இருக்கிறது. ஏனென்றால், காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

30 minutes ago

“தென்தமிழகத்தை நோக்கி மிதமான மழை பெய்யக்கூடும்” – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

56 minutes ago

நேருக்கு நேராக சிங்கத்தை பார்த்த பிரதமர் மோடி! சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு!

குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…

2 hours ago

“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…

2 hours ago

ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…

3 hours ago

12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…

4 hours ago