ஒரே நேரத்தில் தொலைக்காட்சியிலும், ஓடிடியிலும் வெளியாகும் விஜய் சேதுபதியின் புதிய படம்.?

Default Image

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன் டிவி மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இயக்குனர்  இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்பட “துக்ளக் தர்பார்”. இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா, காயத்திரி, ஆதித் ரா, மஞ்சுமா மோகன், பார்த்திபன், கருணாகரன், போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான போஸ்ட்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த நிலையில், இந்த திரைப்படம் தியரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேரடியாக இந்த திரைப்படம் தொலைக்காட்சியிலும், ஓடிடியிலும் வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன் டிவி மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்